tamilnadu

img

மாணவர்கள் கழிவறை சுத்தம் செய்வதில் தவறில்லையாம் - மாவட்ட ஆட்சியரின் சர்ச்சை பேச்சு

அதிக மதிப்பெண் வேண்டும் என்றால்  மாணவர்கள் கழிவறை சுத்தம் செய்வதில் தவறில்லை என்று மத்திய பிதேசத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
மத்திய பிரதேச மாநிலத்தின் கந்துவா மாவட்டத்தின் சின்ஹாரா கிராமத்தில் இயங்கி வரும் அரசு பள்ளியில் அதிகமாக 5 மதிப்பெண் வேண்டும் என்ற கழிவறையை சுத்தம் செய்ய வற்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.  இதையடுத்து மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்  தன்வி சுந்தரியல் , " மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்வதில் தவறில்லை. அவர்களுக்கு சுத்தம் தொடர்பான பயிற்சி கல்வியே அளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  ஆகவே இதில் தவறில்லை என்று தெரிவித்தார்."
மாவட்ட ஆட்சியரின் இந்த கருத்துக்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.